Tag: பழமொழி விளக்கம்

விதியை மதியால் வெல்லலாம்

இதுதான் நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பழமொழி. ஏனென்றால், சிலர் அவர்களது வாழ்கையில் துன்பங்கள் ஏற்படும்போது “எல்லாம் என் விதி! என்ன செய்வது?” என்று விரக்தியில் பேசுவார்கள். அவர்களை முட்டாள்கள், சோம்பேறிகள் என்றோ, இன்னும் பலவாறு பெயர் வைத்தோ அழைக்கலாம். …

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பழமொழி விளக்கம். ஒத்தப் பழமொழிகள்: ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் நமக்குள் சண்டை வரவே வராது. ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை பெரியோர்களும் கவிஞர்களும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு, பின்வரும் கூற்றை நாம் …

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஒத்தப் பழமொழிகள்: கெடுவான் கேடு நினைப்பான்: மற்றவர்களுக்குக் கெடுதல் நினைப்பவனுக்கு கெட்டதே நடக்கும். கேடு என்றால் கெடுதல் என்று அர்த்தம். அடுத்தவன் அழிந்துபோக வேண்டும் என்று நினைப்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். இந்தக்கருத்தையே மேற்கண்ட பழமொழிகள் வலியுறுத்துகின்றன. ஆயுதம் …

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்காதே

ஒத்தப் பழமொழி: கிடைக்கப் போகும் பலாக்காயைவிட கையில் இருக்கும் கிளாக்காய் மேல். இரண்டு பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடிக்கொண்டிருந்தது. நாள்முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. அதனால் …

ஆவாரைப் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா

“பாட்டி! பாட்டி! என்ன பண்ற?” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி. “ஆவாரந் தழைப் பறிக்கிறேன்டா செல்லம்” என்றார் பாட்டி. “எதுக்கு?” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில …

விதியேனு போனா மதியேனு வருது

இந்த பழமொழியை அடிக்கடி நாம் உபயோகிக்கின்றோம். நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக மாறும்போது இந்த பழமொழியை பயன்படுத்துகின்றோம். உதாரணமாக, நாம் நமது நண்பர்களுக்கு நல்லது செய்வோம். ஆனால், அவர்கள் நம் மீது பொறாமை கொண்டிருந்தால் அவர்களது சிந்தனை வேறு விதமாக …

செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்

ஒரு ஊரில் சிவந்தியப்பன் என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு மற்றவர்கள் நன்றாக வாழ்வது பிடிக்காது.  எப்போதும் மற்றவர்களுக்கு கெட்டதையே செய்து கொண்டிருப்பான். அவனது கொடுமைகள் எல்லை மீறின.தேவை என்று கடன் கேட்க வரும் பணத்தைக் கொடுத்துவிட்டு வட்டி மேல் வட்டி …

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

இந்த பழமொழியில் அரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன். பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான். அதனால் அவன் இருட்டில் நடக்கும்போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான். நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம். உதாரணத்திற்கு, …

முன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்

இந்த பழமொழி பொதுவாக சகோதர சகோதரிகளையோ அல்லது பெற்றோர் பிள்ளைகளையோ குறிக்கிறது. வயலை உழும் போது ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன. வயலை செவ்வனே உழ முதல் ஏர் செல்லும் வழியே அனைத்தும் செல்லும். இதற்காகத்தான் முன்னோர்கள் உறவு …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.