போட்டு
அரைகிலோ போட்டு
“சிம்மிலி செய்கிறேன்” என்று கூறினார்.
என்ன அருமையான இனிப்பு வகை தெரியுமா அது? சாப்பிட்டுப் பார்த்தேன்.அமிர்தம்
போன்று இருந்தது.அதனுடைய படத்தை கீழே இணைத்துள்ளேன்.
உபயோகப்படுவதால் இதனை ‘எள்ளிடி’ என்றும் கூறுவர்.
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு
2. எள்
3. வேர்க்கடலை பயிறு
4. வெல்லம்
5. உப்பு
செய்முறை:
1. விகிதம்: ஒரு கிலோ கேழ்வரகு மாவுக்கு
அரை கிலோ எள்,அரை கிலோ வேர்க்கடலை பயிறு மற்றும் அரை கிலோ வெல்லம் தேவை.
உப்பு:கேழ்வரகு மாவுக்கு வழக்கமாக தேவைப்படும் அளவில் கால் பங்கு.
2. கேழ்வரகு மாவையும் உப்பையும் சேர்த்து அடைகளாக சுட்டு எடுத்துக்கொள்ளவும்.(சப்பாத்தி
மாவைப்போன்று பிசைந்துகொண்டு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.பின்
அவற்றை தகடையாக தட்டி சுட வேண்டும்.)
3. பின் அடைகளை சிறு சிறு துண்டுகளாக பிய்த்துக்கொண்டு அனைத்தையும் உரலில் போட்டு
உலக்கையால் நன்றாக மாவு போன்று வரும் வரை குத்தி எடுத்துக்கொள்ளவும்.
4. எள் மற்றும் வேர்க்கடலை பயிறு ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அவற்றை
உரலில் போட்டு தூள் தூளாகும் வரை குத்தவும்.
5. அதேபோல் வெல்லத்தையும் தனியாக உரலில் போட்டு நன்றாக தூளாக்கவும்.
6. இப்போது அனைத்தையும் ஒன்றாக உரலில் போட்டு நன்றாக கலக்கும் வரை உலக்கையால் குத்தவும்.
7. சிம்மிலி தயார்.
செய்யும் முறை மிகவும் நீண்டதாக இருந்தாலும் அதனுடைய சுவையை என்னும்போது சிறியதே.