இனிமை எல்லாம் இருக்குது !
இதய வானில் மிதந்து வந்து
இன்னிசை இனிதே பாடுது !
எத்துணை அழகு என்று
என் இதயம் எண்ணி மகிழுது !
இதய வாசல் திறந்து வைத்து
வரவேற்பு அளிக்கச் சொல்லுது !
கண்ணுக்கு கடல் விருந்தாக
காட்சியெல்லாம் ஜொலிக்குது !
களிப்பூட்டும் கலை அழகாக
கண்ணெதிரே காணக் கிடக்குது !
சிந்திக்க வைக்கும் சித்திரமாக
சிதறி மணம் பரப்புது !
சித்தரிக்கும் சிலை வடிவாக
சிறந்த படைப்பு சிரிக்குது !
கண்கவர் கலைக் காவியமாக
கண்களில் பசும் திரையோடுது !
பசுமை எழிலின் துள்ளலாக
பார்ப்பவர் மனம் மயக்குது !
உழைப்பவர்க்கு கொடை வள்ளலாக
உண்டிட உணவும் அளிக்குது !
இறைவனின் உயிர் ஓவியமாக – என்
இதயம் கண்டு களிக்குது !
அழகான அருமையான வரிகள்…
ரசித்தேன்… வாழ்த்துக்கள்…
அருமையான கவிதை….
பாராட்டுகள்.