என் தாய் நாடே ! என் உயிர் மூச்சே !
உன் அழகும், உன் பண்பும்,
விண்ணையும் வியப்பில் ஆழ்த்தும்.
எத்தனை மொழிகள் ! எத்தனை மதங்கள் !
எத்தனை இனங்கள் ! எத்தனை பிரிவுகள் !
எல்லாம் உந்தன் அழகே !
உன் வீரம் பெரிது, சாதனை பெரிது.
உந்தன் பண்டைய வரலாறும் அரிது.
உன் மக்கள் எல்லாம் உயர்ந்த குணத்தார்.
சாதிப்பவர், சாதனையாளர்.
சதம் சத்தியம். நித்தம் நிஜம்.
சிறப்பு ! சிறப்பு ! சிறப்பு !
உந்தன் அமைவு சிறப்பு !
பாரம்பரியம் ! சிறப்போ சிறப்பு !
இந்திய மண்ணின், வீரமும் தீரமும்,
இன்புறும் நேயமும், இறையாண்மையும்,
இயற்கை அழகும், இனிய காட்சியும்,
இந்நாளும் எந்நாளும் வளரட்டும் !
பாரோர் பார்க்கட்டும் ! பார்ப்போர் வியக்கட்டும் !
ஊரார் கூடட்டும் ! உண்மையென உரைக்கட்டும் !
தலை நிமிர்ந்து நில் என் நாடே !
தலைவணங்கா முடியாய் மிளிறு.
தமிழ்நாடே ! தாய் பாரதநாடே !
உங்கள் வரிகளிலேயே நாட்டுப்பற்று தெரிகிறது.கவிதை அருமை
கவிதை நன்று தமிழ்ப் பிரியன்.