அன்பு வழிகாட்டித் தந்த அற நெறியே !
சாந்தமே உருவான சத்தியமே !
காந்தத்தை பெயராய்க் கொண்டவரே !
சீலம் சிறிதும் குறையாத எளியவரே !
மாந்தர்கள் போற்றும் நல்லவரே ! – எம்
மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே !
சற்றும் நேர்மை பிறழா வலியவரே !
தியாக வாழ்க்கை வாழ்ந்தவரே !
திருநாட்டின் சிறையிருப்பை ஒழித்தவரே !
எங்களின் மனம் விரும்பும் கரும்பே !
எளிய உருவம் கொண்ட இரும்பே !
உலகம் வியக்க வாழ்ந்த சிகரமே !
உலகோர் போற்றும் நல் உத்தமரே !
மகாத்மாவே எங்களின் ஜீவாத்மாவே !
உம்மை மறவோம் எந்நாளுமே !
சிறப்பான வரிகள்… பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..