இறைவனின் இன்பப் படைப்பினிலே – கவிதை

banana

இறைவனின் இன்பப் படைப்பினிலே

இனிமை எல்லாம் இருக்குது !

இதய வானில் மிதந்து வந்து

இன்னிசை இனிதே பாடுது !

எத்தனை அழகு என்று

என் இதயம் எண்ணி மகிழுது!

இதய வாசல் திறந்து வைத்து

வரவேற்பு அளிக்கச் சொல்லுது!

கண்ணுக்குக் கடல் விருந்தாக

காட்சியெல்லாம் ஜொலிக்குது!

களிப்பூட்டும் கலை அழகாக

கண்ணெதிரே காணக் கிடக்குது!

சிந்திக்க வைக்கும் சித்திரமாக

சிதறி மணம் பரப்புது!

சித்தரிக்கும் சிலை வடிவாக

சிறந்த படைப்பு சிரிக்குது!

கண்கவர் கலைக் காவியமாக

கண்களில் பசும் திரையோடுது!

பசுமை எழிலின் துள்ளலாக

பார்ப்பவர் மனம் மயக்குது!

உழைப்பவர்க்கு கொடை வள்ளலாக

உண்டிட உணவும் அளிக்குது!

இறைவனின் உயிர் ஓவியமாக – என்

இதயம் கண்டு களிக்குது!

2 Comments

  1. வெங்கட் நாகராஜ் மார்ச் 15, 2014

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.