- பல முகங்களைக் கொண்டவர்கள் திருடர்கள்.
- கபடதாரிகள் கயவர்களே.
- கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குபவர்களும் திருடர்களே.
- பிறர் உழைப்பில் வாழ்கிறவர்கள் கள்வர்கள்தான்.
- பிறர் உரிமைகளைப் பறிப்பவர்களும் திருடர்களே.
- உண்மையை மறைப்பவர்களும் திருடர்களே.
- சோம்பித் திரிபவர்களும் திருடர்களே.
- பச்சோந்திகளும் திருடர்களே.
- உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களும் திருடர்களே.
- கலகமூட்டி களிப்படைபவர்களும் களவாணிகளே.
- தப்புக்கு துணை போகிறவர்கள் திருடர்களே.
- பணத்துக்கு விலை போகிறவர்களும் திருடர்களே.
- உழைக்காமல் உண்ண நினைப்பவர்கள் திருடர்களே.
திருடினால்தான் திருடர்களா? திருடர்கள் மட்டும்தான் திருடர்களா?
மேற்சொன்ன அம்சங்களை, அம்சமாகக் கடைபிடிப்பவர்களும் தினுசு திருடர்களே.
உங்கள் பார்வையில் மேலும் சில தினுசு திருடர்கள் தெரியலாமே! பின்னூட்டமிடவும்.
அனைத்திலும் ஆணவம் உள்ளவன் திருந்(த்)த முடியாத திருடன்…!
உண்மைதான்.
காணிக்கையை தட்டில் இடச் சொல்லும் பூசாரியும் திருடனே !
த ம 2
மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐயா!
விதம் விதமாய் திருடர்கள் – திருட்டுகள்…
அனைவரும் நிம்மதியாக வாழ, இவ்விதமான களவுகளை களையவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி.