Credit:Flickr
இந்த ஈஸ்டர் திருநாளின் உண்மைப்பொருள் உணர்ந்து சிலவற்றை நமது வாழ்கையில் தவிர்த்தால் நன்மை பயக்கும், நம் வாழ்வும் சிறக்கும் எனக் கருதுகிறேன்.
நிறைந்தவனை நினையாத நாளே வேண்டாம்.
உதட்டில் உறவும் மனத்தில் களவும் வேண்டாம்.
தன்னைப்பற்றியே நினைக்கும் கொள்கை வேண்டாம்.
பகைவர்களைப் பார்த்துப் பதறுதல் வேண்டாம்.
மனிதநேயம் இல்லாத மனங்கள் வேண்டாம்.
கடமை தவறும் களவாணிகள் கூட்டு வேண்டாம்.
நிம்மதி குலைக்கும் நினைவுகள் வேண்டாம்.
பழிக்குப் பழி வாங்கும் பாவம் வேண்டாம்.
கண்ணீரை வருவிக்கும் கடுஞ்சொற்கள் வேண்டாம்.
பழிச்சொல் பரப்பும் பகட்டு வாழ்க்கை வேண்டாம்.
கயவர்களைக் கண்டு கரம் அசைக்கவும் வேண்டாம்.
நம்பி வெம்பி நாசமாக வேண்டாம்.
பசப்பிகளின் பாசப்பிணைப்பு வேண்டாம்.
கூஜா தூக்கும் குரங்குக் கூட்டம் வேண்டாம்.
கலங்கம் கொண்ட காதலின் கற்பனையும் வேண்டாம்.
சோம்பித் திரிபவர்களின் சொந்தம் வேண்டாம்.
ஆணவமும் ஆரவாரமும் அறியாமலும் வேண்டாம்.
மாபாதக மாதவறுகள் மறந்தும் வேண்டாம்.
பிறரை பணயம் வைக்கும் பொற்குவியலாயினும் வேண்டாம்.
துக்கித்து வாழும் துளிநேரமும் வேண்டாம்.
மேற்கண்ட கருத்துக்களைக் கடைப்பிடிப்போம்; புதுவாழ்வு வாழ்வோம். அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அர்த்தமுள்ள அருமையான சிறப்புக் கவிதை
ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!
tha.ma 1
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
அருமையான கருத்துகள்.
உங்களுக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.
தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அருமையான கருத்துக்கள்.இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்