நவீன கொலைகாரர்கள்

கொலைகாரர்கள்

தனது பேச்சுத் திறமையால் வயித்தடி வாயடி அடிக்கும் கொலைகாரர்கள் உண்டு.

நல்ல சுவையான உணவுகள், பதார்த்தங்கள் செய்து மற்றவர்களை உணவுக்கு அடிமையாக்கி அறுப்புண்டு போகப் பண்ணும் கொலைகாரர்களும் இருக்காங்க.

அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துத் தாந்தோன்றித்தனமாகத் தம்பட்டம் அடித்து வாழும் கொலைகாரர்களும் இருக்காங்க.

பிறர் வாழ்க்கைக்குக் குழி வெட்டியே வாழும் கொலைகார மாக்களும் உண்டு.

அடுத்தவர்களின் சொத்துக்கள், உரிமைகள் இவைகளில் எதை அபகரித்தாலும் அவர்கள் கொலைபாதகர்களே.

மாபாதகம் செய்பவர்களும் கொலைகாரர்களே.

நம்பிக்கை துரோகம் செய்பவர்களும் கொலைகாரர்களே.

தங்கள் வசதிக்கேற்ப பொய்யை மெய்யாக்குபவர்களும், மெய்யை பொய்யாக்குபவர்களும் கொலைகாரர்களே.

பிறர் கண்ணீரில் முன்னேறுபவனும் கொலையாளியே.

உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைக் கொடுக்காமல் ஏய்க்கிறவர்களும் கொலைகாரர்களே.

பொய் சாட்சி சொல்பவர்களும் கொலைகாரர்கள்தான்.

ஏங்க ! கத்தி எடுத்துக் கொன்னாதான் கொலையா? மற்றவர்கள் மனதை உடைப்பதும், சொல்லால் கொல்லுவதும், வஞ்சிப்பதும் ஒரு வகையில் கொலைதானுங்க.

8 Comments

  1. 2008rupan மே 23, 2014
  2. Iniya மே 23, 2014

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.