வாழ்க! நல்லவனாய்! – கவிதை

மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது

மனத் தூய்மையோடு மகிழ்ந்து வாழ்தல் பெரிது.

ஊர்கேட்க உத்தமன் எனச் சொல்லுதல் எளிது

குணம் கொண்டவனாய் மனங்கள் போற்ற வாழ்வது கடிது.

பிறர் வாழத் தானும் வாழ்ந்து

அறம் செழிக்க வாழ்வு வாழ்ந்திடல்

சொல்லுதல் யார்க்கும் எளிய, எளிய.

படைத்தவன் பாராட்டும்படி வாழ

மனிதர் மனங்களில் நிலையாய் வாழ

வாய்ச் சொல்லில் வீரம் போதாது.

சொல் செயலில் சோரம் போகாது

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை

‘முடியும்’ என முதல்வனாய்த் துணிந்திடு.

நல்லவனாய் நாளும் நலமாய் வாழ்ந்திட

நல்லதொரு முயற்சியை இன்றே முனைந்திடு.

முயற்சிகள் வளர்ந்தால் மரமாகும்

தோற்றால் நல் வாழ்வின் உரமாகும்.

முயன்று வெற்றி கண்டால் நீ தலைவனாவாய்

தோல்வியுற்றால் நல்லதோர் வழிகாட்டியாவாய்.

பதறாதே மனிதா மனம் பதைக்காதே

மணம் பரவி, மனம் கவர மண்ணில் வாழ்ந்திடு

மாண்டு போகும்முன் மானிடத்தின் மாண்பேற்று.

சுயநல வாழ்வு எல்லாம் பாழு, பாழு

பொருளுணர்ந்து வாழு! பொருள்பட வாழு!

2 Comments

  1. yarlpavanan ஏப்ரல் 14, 2015

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.