அற்ப சுவாச மனிதா நீ
பிறர் மனங்கள் என்றும் பதறாமல்
ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாய்
வாழ்ந்திட என்றும் வரம் கேளு.
ஒவ்வொரு மனிதனும் உறவு என்று
உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு.
ஒவ்வொரு குறைவையும் உடனகற்று.
உன் உள்ளத்தின் இருட்டை வெளியேற்று.
பிறர் படும் துன்பம் எனக்கு இல்லை
எனப் பாகுபடுத்திப் பார்க்காதே.
யானைக்கும் ஒருநாள் அடிசறுக்கும்
அது போன்ற துன்பமும் உனக்கு வரும்.
பகை இல்லாத நல் உள்ளங்கள்
நிம்மதி தந்திடும் இல்லங்கள்.
அனைவரும் உணர்ந்திடும் அக்காலம்
அதுதான் சொர்க்கத்தின் அடையாளம்.
வாழ்க வளமுடன்!
வாழ்க பல்லாண்டு!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..!
வரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!