பனை மரத்திலிருந்து கீழே விழுந்து பொழச்சவனும் இருக்கான்; புல் தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான்.
அறிவாளியா இருந்து அழிஞ்சவனும் இருக்கான்; சிறு உழைப்பாளியா இருந்து முதலாளியா ஆனவனும் இருக்கான்.
ஏழை வீட்டுல பொறந்து மாடி வீட்டுல வாழ்க்கப்பட்டவளும் இருக்கா; மகாராணியா வளர்ந்து கோர வாழ்க்கைக்கு ஆளானவளும் இருக்கா.
அதிஷ்டத்துல முன்னேறுபவங்களும் இருக்காங்க; கஷ்டத்துல ஆண்டியாகறவங்களும் இருக்காங்க.
படிச்சி படிச்சியே பைத்தியம் ஆனவனும் இருக்கான்; படிக்காமலேயே தேர்ச்சி பெறுபவனும் இருக்கான்.
பெத்த பிள்ளையால வஞ்சிக்கப்பட்டவங்களும் இருக்காங்க; பெறாத பிள்ளையால உச்சி குளிர்ந்துபோனவங்களும் இருக்காங்க.
படிச்ச முட்டாள்களும் இருக்காங்க; படிக்காத மேதைகளும் இருக்காங்க.
உதவி உயர்ந்தவங்களும் இருக்காங்க; உதவாம ஓட்டாண்டியா ஆனவங்களும் இருக்காங்க.
பழகி வஞ்சித்தவங்களும் இருக்காங்க; பழகாமலேயே காப்பாற்றுபவங்களும் இருக்காங்க.
கொடுக்கற கொடையாளிகளும் இருக்காங்க; கொடுக்காத கஞ்சன்களும் இருக்காங்க.
நம்பாம ஏமாந்தவங்களும் இருக்காங்க; நம்பி பொழச்சவங்களும் இருக்காங்க.
உழச்சி முன்னேறனவங்களும் இருக்காங்க; உழைக்காம பிறர சுரண்டுறவங்களும் இருக்காங்க.
பாவம் செஞ்சி திருந்தி வாழ்ந்தவங்களும் இருக்காங்க; புண்ணியம் செய்யறேன்னு பாவியானவங்களும் இருக்காங்க.
பிறருக்காகக் கதறி அழுபவங்களும் இருக்காங்க; பிறர கதற வச்சி சிரிப்பவங்களும் இருக்காங்க.
பேசியே சொதப்புகிறவங்களும் இருக்காங்க; பேசாம சாதிப்பவங்களும் இருக்காங்க.
அள்ளிக்கொடுப்பவங்களும் இருக்காங்க; அள்ளிக்கொள்ளவே வாழ்பவங்களும் இருக்காங்க.
ரசிச்சு வாழறவங்களும் இருக்காங்க; வாழாம சலிச்சிக்கிறவங்களும் இருக்காங்க.
பிறருக்காக ஓடா உழைக்கறவங்களும் இருக்காங்க; பிறர் உழைப்பில் அட்டையா ஒட்டிக்கொள்கிறவங்களும் இருக்காங்க.
அடக்கமா அரும்பெரும் செயல்களைச் செய்யறவங்களும் இருக்காங்க; ஆரவாரத்தோடு உப்புக்கு உபயோகமில்லாத செயல்களைச் செய்யறவங்களும் இருக்காங்க.
இந்த உண்மைகளுக்கான உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
வணக்கம்
அண்ணா
நல்ல வினாக்கள் வினாவி பதிவு அமைத்த விதம் நன்று.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களது வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி.
ஆனால், நான் வெறும் 24 வயதாகும் சின்னப் பையந்தான்.
உண்மைகள்…
தொடர வாழ்த்துக்கள்…
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 2
mr.jon…padichipaithiyakaran anavanum irukan…..it is ture….
நல்ல முயற்சி,,,,, பதிவுகள் அருமை…….keep rocking…நான் தங்கள் பக்கத்து ஊரான விரியூரில் வசிக்கிறேன்
ஆஹா! என்னே ஆனந்தம்! பக்கத்து ஊரில் இருந்து தாங்கள் அனுப்பிய பாராட்டுக்கு நன்றி. அநேகமாக நீங்கள் என் தம்பி ஜெரோம்-இன் நண்பராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உண்மைதானே?