என் இந்தியா – கவிதை

india

என் தாய் நாடே! என் உயிர் மூச்சே!

உன் அழகும், உன் பண்பும்,

விண்ணையும் வியப்பில் ஆழ்த்தும்.

எத்தனை மொழிகள்! எத்தனை மதங்கள்!

எத்தனை இனங்கள்! எத்தனை பிரிவுகள்!

எல்லாம் உந்தன் அழகே!

உன் வீரம் பெரிது, சாதனை பெரிது.

உந்தன் பண்டைய வரலாறும் அரிது.

உன் மக்கள் எல்லாம் உயர்ந்த குணத்தார்.

சாதிப்பவர், சாதனையாளர்.

சதம் சத்தியம். நித்தம் நிஜம்.

சிறப்பு! சிறப்பு! சிறப்பு!

உந்தன் அமைவு சிறப்பு!

பாரம்பரியம், சிறப்போ சிறப்பு!

இந்திய மண்ணின், வீரமும் தீரமும்,

இன்புறும் நேயமும், இறையாண்மையும்,

இயற்கை அழகும், இனிய காட்சியும்,

இந்நாளும் எந்நாளும் வளரட்டும்!

பாரோர் பார்க்கட்டும்! பார்ப்போர் வியக்கட்டும்!

ஊரார் கூடட்டும்! உண்மையென உரைக்கட்டும்!

தலை நிமிர்ந்து நில் என் நாடே!

தலைவணங்கா முடியாய் மிளிறு.

தமிழ்நாடே! தாய் பாரதநாடே!

2 Comments

  1. தொழிற்களம் குழு டிசம்பர் 3, 2012
  2. T.N.MURALIDHARAN டிசம்பர் 16, 2012

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.