இயற்கையைப் பார் – கவிதை

இயற்கைக் காட்சி

கண்ணுக்கு விருந்தாக

களிப்பூட்டும் காவியமாக

சிந்திக்க வைக்கும் சித்திரமாக

சித்தரிக்கும் கலை அழகாக

படைப்பின் இலக்கணமாக

படைப்பாளிகளின் பக்கத் துணையாக

உணர்வுக்கு ஒரு வசந்தமாக

உயிர்களுக்கு உறைவிடமாக

பசுமை எழிலின் துள்ளலாக

பார்ப்பவர்களுக்குக் கொடை வள்ளலாக

இறைவனின் வண்ண ஓவியமாக

கவிஞர்களின் கண்கவர் காவியமாக

ஐம்பூதங்களின் ஐக்கியமாக – விளங்கும்

அழகு இயற்கையைப் பார்!

இன்ப இயற்கையைப் பார்!

One Response

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.