கண்ணுக்கு விருந்தாக
களிப்பூட்டும் காவியமாக
சிந்திக்க வைக்கும் சித்திரமாக
சித்தரிக்கும் கலை அழகாக
படைப்பின் இலக்கணமாக
படைப்பாளிகளின் பக்கத் துணையாக
உணர்வுக்கு ஒரு வசந்தமாக
உயிர்களுக்கு உறைவிடமாக
பசுமை எழிலின் துள்ளலாக
பார்ப்பவர்களுக்குக் கொடை வள்ளலாக
இறைவனின் வண்ண ஓவியமாக
கவிஞர்களின் கண்கவர் காவியமாக
ஐம்பூதங்களின் ஐக்கியமாக – விளங்கும்
அழகு இயற்கையைப் பார்!
இன்ப இயற்கையைப் பார்!
அருமையாச் சொல்லி உள்ளீர்கள்… வாழ்த்துக்கள்…
நன்றி…
திண்டுக்கல் தனபாலன்